தமிழகத்தில் 11 இளம் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம் வருமாறு, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியாளராக இருந்த சி.ஏ. ரிஷப் – திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் மேட்டூர் சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார் ஆட்சியர் வி.தீபனாவிஸ்வேஸ்வரி – தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதே போல், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் பி.அலர்மேல்மங்கை கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர்
தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் – தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் சிவகாசி சார் ஆட்சியர், எம்.பிருத்திவிராஜ் நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வி.சரவணன தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும் விடுப்பில் இருந்த கே.எம்.சரயூ – ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும் 10. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக அருந்த வந்தனா கார்க் கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும் திண்டிவனம் சார்ஆட்சியர் எம்.பி.அமித் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More