Mnadu News

ஜார்கண்டில் நடந்த குண்டுவெடிப்பில் 11 வீரர்கள் படுகாயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள saraikella பகுதியில் உள்ள குச்சாய் என்னும் இடத்தில் மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் அதிகம் காணப்படுவதால் அங்கு பாதுகாப்பு படை ராணுவ வீரர்கள் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர் .

இந்நிலையில் இன்று அதிகாலை வீர்கள் முகாமிட்டிருக்கும் பகுதியில் சிறிய ரக குண்டு வெடித்தது .குண்டு வெடித்ததை கண்டு விழித்துக்கொண்ட ராணுவ வீரர்களின் மீது மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படையினரும் விடாமல் பதில் தாக்குதல் நடத்தினர் . நடந்த இந்த தாக்குதலில் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர் . காயமடைந்த வீரர்களை மீட்டு ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More