Mnadu News

12 மணிநேர வேலை மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ் : சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவையில் கடந்த ஏப். 21-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இது தொடர்பாக கடந்த ஏப். 24-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கத்தினருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அன்றைய தினமே முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மே தின நிகழ்ச்சியில் அவர்அறிவித்தார். இந்நிலையில், சட்ட மசோதாவை திரும்பப் பெற்றதாக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More