Mnadu News

12 மணிநேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவையில் கடந்த 21-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு தொழிற்சங்கங்களும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளது.

Share this post with your friends