தேர்தலில் பணம் கொடுத்து வாக்களிக்க வைக்கும் செயல்முறையை ஒழிக்க கடுமையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் இன்று வரை நீங்கவில்லை.
அந்த வகையில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 350 பூத் நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
பூத் நிர்வாகிகளுக்கு 1500 ரூபாய் வீதம் வாக்கு சேகரிப்பை கண்காணிக்க லஞ்சப் பணம் வழங்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.