Mnadu News

2023 டிசம்பருக்குள் அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்கும் முகேஷ் அம்பானி அறிவிப்பு

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டில், அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைத்தார். ,இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி , தொடக்கத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது என்றார். எனினும், வரும் 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Share this post with your friends