இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு 9 மாநிலங்களில் வெப்ப அலை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவும். இந்த மாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அதோடு, பீகார், உ.பி., கங்கை நதிக்கு தெற்கே உள்ள மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் வெப்பம் அதிகரிக்கும். சராசரியாக இயல்பை விட 4.5 முதல் 6.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More