Mnadu News

காஸ்மீரில் ராணுவ வீரர்களால் 3 தீவிரவாதிகள் என்கவுண்டர்

இந்தியாவில் தீவிரவாதிகள் அதிகம் இருக்கும் பதட்டமான பகுதியாக நீண்ட காலமாக இருந்து வருவது ஜம்மு காஸ்மீர் . இந்நிலையில் காஸ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் இமாம் சாகிப் பகுதில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது .

இதனையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது சரமாரியாக சுட்டனர் .பதில் தாக்குதல் நடத்திய ராணுவத்தினரும் விவேகத்துடனும் வேகத்துடனும் செயல் பட்டனர் .

நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் ராணுவத்தினரால் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் ,.

Share this post with your friends