உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம் 50 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
பக்தி பரவசத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பியவாறே திரளான மக்கள் வெள்ளத்தில் தேரோட்டம் மிதந்து நிலையை வந்தடைந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்சியில் திளைத்துள்ளனர்