Mnadu News

கேரள முன்னாள் முதல்வர் காலமானார்! தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல்!

கேரளா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் மிக முக்கியமான ஒருவர் உம்மன் சாண்டி அவர்கள். இவர், காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். அதே போல், கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து சுமார் 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,இன்று அதிகாலை 4.30 மணியளவில் 73 வயதாகும் உம்மன் சாண்டியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் உறுதி செய்யப்பட்டது.

2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையும் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக உம்மன்சாண்டி பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க இவரின் வியூகம் பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends