Mnadu News

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,இன்று ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்த மண்டலமாக மாறியது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends