Mnadu News

6 வினாடிகள்.. தரைமட்டமாகும் சாந்தினி சௌக் பாலம்

மும்பை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்திருக்கும் மிக முக்கிய சந்திப்பு சாந்தினி சௌக் பகுதியாகும். இந்தப் பாலத்தைக் கடந்துதான் புனேவிலிருந்து செல்ல முடியும். இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பழைய பாலத்தை இடித்துவிட்டு அங்கு புதிய அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதையடுத்து, பழைய பாலத்தில் 1300 துளைகள் இடப்பட்டு, அதில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன. நாளை அதிகாலை 2 மணியளவில், வெடிபொருள்கள் மூலம் பாலம் தகர்க்கப்படவிருக்கிறது. அதையொட்டி, இப்பகுதியில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்துத் தடை செய்யப்படுகிறது.

Share this post with your friends