Mnadu News

65 பெண்களுக்கு தபாலில் வந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்: குழப்பத்தில் போலீஸ்.

ஆஸ்திரேலியாவில் “அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கையால் எழுதப்பட்ட சில குறிப்புகளுடன் 65 பெண்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் தபாலில் வந்துள்ளது. இவை அனைத்தும் மெல்போர்னின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட சில பெண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பெண்கள் அனைவருக்குமே அனுப்பியவர் உடன் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். எதற்காக அந்த நபர் திட்டமிட்டே இவ்வாறான செய்கையில் ஈடுபட்டார் என்பதை ஆராய்வதில் ; போலீசார் குழம்பி உள்ளனர்.

Share this post with your friends