Mnadu News

96.26 லட்சம் மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

தமிழ்நாடு மின்வாரியம் மின்நுகர்வோர் தங்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், இதுவரை ( நேற்று வரை ) 96 லட்சத்து 26 ஆயிரம்; மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பதிவில், நேற்று வரை 92.26 லட்சம் மின்நுகர்வோர் சிறப்பு முகாம் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் மின்இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends