திருச்சி அடுத்த உறையூர் பகுதியை சேர்ந்த சபரிகிரிவாசன், அப்பகுதியிலுள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்றிரவு பணிமுடிந்து வீட்டுக்கு சென்ற அவரை வழிமறித்த மர்மகும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
தகவலறிந்து வந்த உறையூர் போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.