இன்றைய தினம் நடைபெற்ற மக்களவை கூட்ட தொடரில் மாநிலங்களவை எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார் .மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருப்பதாவது,தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி உள்ளது என வேதனையுடன் தெரிவித்தார் .
மேலும் ,பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லைஇந்தியா தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியடைந்து வருகிறது என தமிழச்சி தங்கபாண்டியன் குறிப்பிட்டுள்ளார் .
தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என சுட்டிக்காட்டி தெரிவித்தார் .அதற்கடுத்தபடியாக அவர் தெரிவிக்கையில் ,நிதித்துறையில் தனிப்பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள் என மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் அவரது வாழ்த்தை தெரிவித்தார் .நிர்மலா சீதாராமன் எங்கள் தமிழ் மண்ணை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன் என தமிழச்சி தங்கபாண்டியன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் .