நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது மிகுந்த பரபரப்பையும் ,அதிர்ச்சியும் நிலவியது.வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர் . அரசியல் காரணமா அல்லது
சொத்து பிரச்னைகளா என காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் ,நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஷ்வரியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் .அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நெல்லையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.இதுபோன்ற சம்பவங்கள் முடிவே இல்லாமல் தொடர்கிறது என ஸ்டாலின் வன்மையாக கண்டனம் தெரிவித்தார்.