இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த புல்வாமா தாக்குதலால் அசாதாரண சூழல் தற்போது நிலவி வருகிறது .
இந்த நிலையில் இரு நாடுகளின் எல்லையில் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பாக்கிஸ்தான் அரசு இந்தியத் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப முடியாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .
பாகிஸ்தானில் 10 சதவீதம் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படலாம் என்ற விதிமுறை இருக்கையில் இந்தியாவிற்கு மட்டும் தடை விதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது