டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய சுற்றுலா மாநாட்டில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார்.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சுற்றலா, கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.