Mnadu News

18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையத்தை நாடுகிறது திமுக

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு விலக்காக மற்ற 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் கட்டாயம் இருக்கும். மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரத்தில் அமமுகவின் கை ஓங்கும் என்ற பயத்தில் இந்த 3 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக யூகிக்கப்படுகிறது.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ எம்பிக்கள் கூட்டத்தில் இந்த மூன்று தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்படாததை பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைக் குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்தை திமுக திட்டமிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More