தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குனரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி பேசியதாவது “கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் வகையில் வாக்காளர்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் ஓர் அழகான வேட்பாளர். அவரை உங்கள் தொகுதி உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உங்களது ஆதரவை அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.