காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குண்ணவாக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்ப பேருந்திற்காக காத்திருந்தார். அப்பொழுது அவ்வழியாக காரில் சென்ற கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 29 வயதான சதாம் உசேன் காரை நிறுத்தி அந்தப் பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து கத்தியை காட்டி பாலியல் வன்புணர்வு செய்து நான்கு கிராம் மதிப்பிலான தங்க நகைகளை பறித்துக் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இதேபோன்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சதாம் உசேன் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More