உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று வாரணாசியில் உள்ள காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 11.30 மணியளவில் வாரணாசி கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில், சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல்,, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, உட்பட கூட்டணி கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.