அக்காவிற்கு தம்பியாகவும் , ஊரில் எந்த தப்பு நடந்தாலும் தட்டி கேட்பதில் முதல் ஆளாகவும் வலம் வருகிறார் நாயகன். அக்காக்களின் பாசத்திற்கு கட்டுப்பட்டு சட்டம் பயில்கிறார் நாயகன். அப்போது நடைபெறும் பாலியல் வழக்கு ஒன்று நாயகனிடம் வருகிறது.
இந்த பாலியல் நாசவேலையில் ஈடுபடும் நபர் வில்லனிடம் உதவி கேட்கிறார். இந்த விவகாரத்தில் வில்லனின் மகனுடன் ஏற்படும் மோதல் காரணமாக அவரை நாயகன் கொலை செய்கிறார். இதனையடுத்து, வில்லனுடன் ஏற்படும் மோதல் மற்றும் அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதே மீதி கதை.
நாயகன் தனது கடந்த கால படங்களை விட இந்த படத்தில் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் நடித்துள்ளார். அவ்வப்போது வந்து செல்லும் நாயகியின் காட்சிகள் ரசிக்கும் வண்ணம் உள்ளது. நாயகனின் மாமாவாக வரும் சூரியின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைக்கின்றது. படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் பலம் சேர்த்துள்ளது.