கர்நாடகாவில் முதல்-அமைச்சர் பதவிக்கு காங்கிரசுக்குள் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை முன்னாள் துணை முதல்-அமைச்சரான பரமேஷ்வருக்கு தர வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் துமகூரு நகரில் கோஷங்களை எழுப்பியபடியும், கட்சி கொடி மற்றும் பரமேஷ்வர் உருவம் பொறித்த படத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தியபடியும் சாலை வழியே ஊர்வலம் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.எனினும், கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பவே, இந்த விசயத்தில் தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More