ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் -ஷிவானி தம்பதி. ரமேஷ் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த ரமேஷ் ஒன் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஷிவனியை திருமணம் செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷின் நண்பரான ராமாராவ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அவர், கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அப்போது ஷிவானியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலமாக ரமேசுக்கு இந்த விஷயம் தெரியவந்து மனைவியைும், நண்பரான ராமாராவையும் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் பழகி வந்துள்ளனர். இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய இருவரும் சதித் திட்டம் தீட்டி உள்ளனர்.
அதன்படி கடந்த 1ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய ரமேசுக்கு மனைவி ஷிவானி மது ஊற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. போதையில் மயக்க நிலையில் இருந்த ரமேஷை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். பின்னர், எதுவும் தெரியாதது போல மறுநாள் காலையில் மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததாக கதறி அழுது நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
இது குறித்து ரமேஷின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாருக்கு மனைவியின் மீது சந்தேகம் வலுக்கவே ஷிவனியை தனியே அழைத்து துருவி விசாரித்து உள்ளார், அப்போது தான் அவரும், கள்ளக்காதலனும் கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.