பயங்கரவாத சதித் திட்டம் தொடர்பாக பெங்களூருவில் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) சோதனை நடத்தினர்.
பயங்கரவாத தொடர்புகளை கொண்ட சந்தேக நபர்களின் வளாகங்களில் மாநில காவல்துறையுடன், என்ஐஏ அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் முழுவதும் 444 இடங்களில் மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் என்ஐஏ-க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றது.