ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள147 தொகுதிகளில் 78 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஒடிசாவின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More