விஷ சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும், எம்.பி.க்கள் 3 பேர் என அனைவரும் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது விஷ சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.