மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக வேட்பாளரான ஓம் பிர்லா 297 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான சுரேஷ் 232 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓம் பிர்லா 2வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.