இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி நம்பி’ என்ற தலைப்பில் தமிழில் திரைப்படம் உருவாகிவருகிறது.
இந்த படத்தில் பிரபல நடிகர் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இயக்கி வந்தார்.
இந்நிலையில், இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பாரீஸில் நடைபெறவுள்ளது. இதற்காக இப்பட கதாநாயகி சிம்ரனுடன் படக்குழுவினர் பாரிஸ் நாட்டிற்கு செல்கின்றனர் .