Mnadu News

தங்கத்தமிழ்செல்வனை நீக்குவதில் பயமோ தயக்கமோ இல்லை -தினகரன்

தங்கத்தமிழ்செல்வன் பேசிய ஆடியோ குறித்து சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது,சர்ச்சை பேச்சுக்காக தங்கத்தமிழ்செல்வனை அழைத்து கண்டித்தேன்.மேலும் கொள்கை பரப்பு செயலாளர் ,மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க நேரிடும் என எச்சரித்ததாக தினகரன் தெரிவித்தார் .தங்கத்தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்கமாட்டார் .பெட்டி பாம்பாக அடங்கிவிடுவார். செல்லப்பாண்டியன் என்ற கட்சி நிர்வாகியிடம் தான் தங்க தமிழ் செல்வன் பேசியுள்ளார் .தங்கத்தமிழ்செல்வனின் பேச்சுகளும் ,செய்லபாடுகளும் சரி இல்லை என புகார்கள் வந்துள்ளன ,தங்க தமிழ்ச்செல்வனை நீக்குவிடுவேன் என கடந்த 20 ஆம் தேதியில் எச்சரித்தாக குறிப்பிட்டார் .என்னை பார்த்தாலே அவர் பொட்டி பாம்பாக அடங்கிவிடுவார் என கூறினார் .தங்க தமிழ்செல்வனிடம் விளக்கம் கேட்க இனி எதுவும் இல்லை .

Share this post with your friends