சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த கடைகளில் அடிக்கடி பால் பாக்கெட்டுகளின் ட்ரேக்கள் திருடுபோவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பால் முகவர்கள் சங்க நலச்சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்து வந்துள்ள நிலையில் ஜாம்பஜார் பகுதியில் சிசி டிவி பதிவுகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த இலியாஸ், வசின் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர் . மேலும் இவர்களிடமிருந்து 100 -க்கு மேற்பட்ட பால் பாக்கெட்டுகளையும், மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.