Mnadu News

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு : 7 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிலூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.  விழாவினையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது . இதைத் தொடர்ந்து இன்று கோவிலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை  புதுக்கோட்டை மாவட்ட  ஆர். டி .ஓ சிவகுமாரி தொடங்கி வைத்தார்.

போட்டியில் 700  காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன .  காளைகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More