Mnadu News

மீன்வளங்களை அழிக்காமல் இருக்க புதிய வலை அறிமுகம்

மீன் வளங்களை அழிக்காமல், மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என சதுரகன்னி தூர்மடி வலைகளை அறிமுகப்படுத்தி, மத்திய கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியக் கடலில் மீன்பிடிக்கும்   தமிழக மீனவர்கள் மீன் வளங்களை பாதுகாக்க சதுரகன்னி தூர்மடி வலைகளை பயன்படுத்த வேண்டுமென, மத்திய கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழக கடலோர நெடுகிலும் உள்ள மீனவர்கள் முக்கோணக்கன்னி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் சிறு குஞ்சுகள் வலைகளில் சிக்கி மீன் வளங்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக சதுரகன்னி தூர்மடி வலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, மத்திய கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம்.

இந்த வலைகளின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சி இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், நாகூர் கிராமங்களை சேர்ந்த படகு உரிமையாளர்கள், வலை பின்னும் மீனவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சதுரகன்னி தூர்மடி வலைகள் கொண்டு எவ்வாறு ஏற்றுமதி ரக மீன்களை  பிடிப்பது என்பது குறித்து மீனவர்களுக்கு பயிற்சியும், விளக்கமும் அளிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து கூறிய கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், இந்தியக் கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் முக்கோணக்கன்னி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் சிறு குஞ்சுகள் சிக்கி கடல் வளம் அழிந்து வருவதாகவும், எனவே அழிந்து வரும் மீன் வளங்களை பாதுகாத்து மீனவர்களின் வருமானத்தை மேலும் அதிகரிக்க  தமிழக மீனவர்களுக்கு சதுரகன்னி தூர்மடி வலைகள் 50 சதவீத மானியத்துடன் மத்திய கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் சார்பில் தற்போது வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இதனை அனைத்து மீனவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More