சீனாவில் கடந்த வெள்ளியன்று காலையில் ஹெஃபெய் வனஉயிர் பூங்காவில் கூண்டுக்குள் இருந்த சிம்பான்ஸீ குரங்கு முறிந்து விழுந்த மூங்கில் மரத்தைப் பற்றிக் கொண்டு கூண்டை விட்டு வெளியேறியது. இதை அறிந்ததும் பார்வையாளர்களை பத்திரமாக கதவுக்கு அப்பால் அனுப்பிக் கொண்டிருந்த போதே, சிம்பான்ஸீயும் தப்ப முயன்றது. அப்போது அதைத் தடுக்க வந்த வன உயிர் காப்பாளரையும் அது எட்டி உதைத்து கீழே தள்ளியது.
யங் யங் எனப் பெயரிடப்பட்ட அந்த குரங்கு வன உயிர் பூங்காவில் இருந்த கட்டிடம் ஒன்றின் மேற்கூரை மீது ஏறி தப்ப முயன்றதை அடுத்து, மயக்க ஊசி செலுத்தி மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது யங் யங்.