சென்னையை அடுத்த தாம்பரம் அற்புதம் நகரை சேர்ந்தவர் பிரதீப். இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியுள்ளது. இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்து சென்ற தாம்பரம் போலீசார் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.
கொல்லப்பட்ட சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார். முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.