இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் ௩௦௦க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில், பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கர்நாடாக டி.ஜி.பி க்கு வந்த தகவலையடுத்து தமிழக காவல்துறை தலைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதை தொடர்ந்து பாம்பன் சாலை பாலம் மற்றும் ரயில் பாலத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்