வரும் மே 31 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .
அங்கு இருக்கும் அண்ணா பூங்காவில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த மலர் கண்காண்ட்சி நடைபெற உள்ளது .இந்த கண்காட்சியுடன் கோடை திருவிழாவையும் கொண்டாட ஏற்பாடுசெய்யப்பட்டு வருகின்றன .
அங்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் மற்றும், சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பார்வையிட்டார் . மேலும் அவர் சுற்றுலா துறை அதிகாரிகளிடம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.