நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பிரச்சாரம் செய்வது போல ஒரு வீடியோ சமூகவலைத்தளத்தில் வலம் வருகிறது. இதற்கு நடிகர் கார்த்தி தற்போது அளித்துள்ள விளக்கத்தில் “தேர்தலில் நான் பிரசாரம் செய்வது போன்ற வீடியோ குறித்து எனக்கு நிறைய கேள்விகள் வந்தது.
அதுமுற்றிலும் தவறான தகவல். தேர்தலில் நான் வாக்காளர் மட்டுமே” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
There are queries about me campaigning in this election. Absolutely not. I will participate as a voter alone. Thanks.
— His Highness Vanthiyathevan (@Karthi_Offl) March 25, 2019