இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘என்.ஜி.கே’. இதன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா கூறியதாவது, “அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது.
செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செய்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.