காத்தவராயன் பட இயக்குனர் சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் இ.பி.கோ 302′. இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகின்றனர்.
இவர்களுடன் வையாபுரி, ராபின் பாபு, போண்டாமணி, வினிஸ் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், சவுத் இந்தியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை கஸ்தூரி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துர்கா ஐ.பி.எஸ் என்ற வலுவான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி நடிக்கிறார்.