திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகை சமந்தா நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அலிபிரி மலைப்பாதை வழியாக பாதை யாத்திரையாக நடந்து திருமலைக்கு சென்ற சமந்தா இரவு திருப்பதி மலையில் தங்கி இன்று அதிகாலை சுப்ரபாதம் தரிசனத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிறப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்தேன் . நான் கதாநாயகியாக நடித்துள்ள ஓ பேபி திரைப்படம் வருகின்ற 5ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது.ஓபேபி திரைப்படம் வெற்றி பெற ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்.இந்த இடத்தில் வேறு விசயங்கள் பற்றி பேச விரும்பவில்லை என கூறி சென்றார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More