‘நாடோடிகள் 2’ படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரூ.50 லட்சம் மட்டுமே தயாரிப்பாளர் வழங்கியுள்ளார். இதனால், சமுத்திரக்கனியும், சசிகுமார் தங்களின் சொந்த பணம், ரூ.4.50 கோடியை செலவு செய்து இப்படத்தை எடுத்து முடித்துள்ளனர்.
ஆனால், சமுத்திரக்கனிக்கும், சசிகுமாருக்கும் தெரியாமல் இந்த படத்தின் மீது ரூ.2 கோடிக்கும் மேல் தயாரிப்பாளர் கடன் வாங்கி உள்ளார். இதனால் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சமுத்திரக்கனி பல முயற்சி செய்தும் தயாரிப்பாளர் தரப்பினர் ஒத்து போகாததால், படம் கைவிடப்படலாம் என கூறப்படுகிறது.