கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல்நாளான நேற்று இந்திய வீரர்கள் 2 வெள்ளி, 3 வெண்கலம் உட்படட 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ், போட்டியில் அவினாஷ் சாபிள்ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதாரி, 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்