அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதார் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகைப்பதிவேடு முறையை மே 6ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் ஆதார் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறையை நடைமுறைக்கு கொண்டு வரவும் , தொடர்ந்து பராமரிக்கவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், கணினி பயிற்றுநர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டது.இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் இம்முறையை வரும் மே மாதம் 6ம் தேதி மாலை 3 மணிக்குள் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்று மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.