Mnadu News

ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “அரசியலும், சினிமாவும் ஒன்றில்லை. ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார்.

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறுகிறார். ரஜினி எப்பொழுதுமே அரசியலுக்கு வரமாட்டார். ஒருவேளை வந்தால், உடனடியாக ஜெயிலுக்கு போவார்” என்று சுப்ரமணியன் சுவாமி ரஜினியை பற்றி சர்ச்சையாக விமர்சித்துள்ளார் .

Share this post with your friends