நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் 30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி சிறையில் உள்ளார். அவருக்கு உதவியாக இருந்த அமுதவள்ளியின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை ஜாமினில் விடுவிக்குமாறு அவர்கள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் , அமுதவள்ளி மற்றும் அவருடனான 8 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார், அதற்கு அனுமதி கோரி, நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கேட்டு மனு செய்துள்ள நிலையில், சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள இந்த மனு, அமுதவள்ளி தரப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More