சந்திரயான் 2 பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஜூலை 15 ஆம் தேதி ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் கவுன்டவுனும் தொடங்கியது. கவுன்டவுன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில் ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கவுன்டவுன் நிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அனைத்து விதமான ஆய்வுகளும் முடிக்கப்பட்டு இன்று மதியம் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.