Mnadu News

பொள்ளாச்சி வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி சரண்

பொள்ளாச்சி வழக்கு தமிழகத்தில் சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த திருப்பமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்க முயன்றவனில் ஒருவனான மணிவண்ணன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவர் ஏன் தீடிரென தானகவே ஆஜர் ஆக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பார் நாகராஜன் குறித்த தகவல் ஏதும் இவரிடம் இருக்குமா? என்ற கேள்விகள் மக்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது.

Share this post with your friends